×

தூக்குபோட்டு கணவர் தற்கொலை

 

முஷ்ணம், ஏப். 29: முஷ்ணம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் வினோத்(29). இவர் முஷ்ணம் அருகே நாச்சியார்பேட்டையில் பானிபூரி விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம், பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்த அபிதா என்பவருடன் கடந்து ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, 6 வயதில் புவனேஷ்வரி என்ற மகள் உள்ளார். வினோத்திற்கு குடிபழக்கம் உள்ளதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். இதனால் ஒரு வருடமாக அபிதா தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி முஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த தெப்பம் நிகழ்ச்சியில் வினோத் மனைவி அபிதா மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை புரிந்து, பல்வேறு இடங்களில் பானிபூரி விற்பனை செய்துள்ளனர்.

இதனையறிந்த வினோத் தனது மனைவி அபிதாவிடம் சென்று குடும்பம் நடத்த வருமாறு கூறினார். அதற்கு அபிதா வர மறுப்பு தெரிவித்ததால் 24ம் தேதி இரவு 7 மணியளவில் வினோத் தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது தாய் அஞ்சுகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக முஷ்ணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அண்ணாதுரை, முஷ்ணம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post தூக்குபோட்டு கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mushnam ,Vinod ,Annadurai ,Musnam Angalamman Temple Street ,Panipuri ,Nachiyarpet ,Abita ,Tiruvannamalai district ,Perumapatta ,
× RELATED தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த...